கவிஞர் புதுகை ஆதிரா மகிழ்வோடு பகிர்கிறார்
#பேராசிரியர்_சா_விஸ்வநாதன்
#அவர்களின்_முதல்_வாழ்த்து❤️
#பேரன்பும் நன்றியும் சார்🙏🏻
வணக்கம்
ஹைக்கூ கவிதையை
'ஓவியத்திற்கு ஒப்பான கவிதை' என்றும் கூறுவர். வாசிக்கிற வாசகனின் மனத்திரையில் புதிய காட்சிகளை ஓவியங்களென வரைந்து செல்லும் சிறப்புக்குரியது ஹைக்கூ. வாசகனின் மூடிய கண்களுக்குள்ளும் காட்சிகளை நகர்த்திச் செல்லும் வல்லமை ஹைக்கூவிற்கு உண்டு.
ஹைக்கூவைப் புரிந்துகொள்ள கூரான பார்வையும், தேர்ந்த மொழியறிவும் இருக்கவேண்டும். மேம்போக்கான வாசிப்பில் வாசகனுக்குள் எந்த மாற்றங்களையும் கைக்கூ நிகழ்த்தாது.
புரிதல் அரிதானவர்களுக்கு ஒரு புதிரைப் போல இருக்கும் ஹைக்கூ. ஆனால் புரிந்து கொண்டவர்களுக்கோ அது ஒரு புதையலாகிவிடும். ஹைக்கூவிலிருந்து விலகி நின்றால் அது வெறும் வார்த்தைகளின் மாயம்தான். நெருங்கி வருபவர்களுக்கோ அது ஒரு இயற்கை நேசம்; மானுட நேயம். ...
எதையும் ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் செய்யும் கவிஞர் ஆதீராவின் இந்தப்
' பாதங்களுக்குள் நழுவும் மணல்' நூலெங்கும் கொட்டிக் கிடக்கின்றன ஹைக்கூ வெனும் குறுமணல்கள். கொஞ்சமாய் அள்ளிக் கொள்ளுங்கள்; உங்கள் காதுகளில் பூமியின் இதயம் துடிப்பதும் கேட்கும்; கடலின் ஓங்கார முழக்கமும் நிச்சயம் கேட்கும்.
-கவிஞர் மு.முருகேஷ் நூலின் அணிந்துரையில்
.....
புதுக்கோட்டைக் கவிஞர், புதுகை ஆதீரா (நாகலட்சுமி ராஜகோபாலன் ) அவர்களின் "பாதங்களுக்குள் நழுவும் மணல்", புதுக்கோட்டையில் நடைபெற்ற 5 ஆவது தமிழ் ஹைக்கூ உலக மாநாட்டில் வெளியிடப்பட்டது . இது அவரின் இரண்டாவது ஹைக்கூ நூல். முதல் நூல் 2023 ல் வெளிவந்த"காலம் தப்பிய மழை ". இந்த கவிதை நூலுக்கு கவிஞர் மு.முருகேஷ், கவிஞர்.பழநிபாரதி இருவரும் சிறந்த அணிந்துரை வழங்கியுள்ளனர். இந்த அணிந்துரைகள் ஹைக்கூவின் வடிவத்தையும் , ஆதீராவின் கவிதைகளின் சிறப்பையும் பேசுகின்றன. இந்த கவிதைத் தொகுப்பில் 146 ஹைக்கூ கவிதைகள் உள்ளன. அதில் 10 கவிதைகள் உங்கள் பார்வைக்கு ...
கூட்டிலிருந்து விடுபட்ட பறவை
வானில் பறந்தபடியே தேடும்
கூடு கட்ட மரங்களை
பக். 13.
மரக்காலில் நெல்மணிகள்
அளக்க அளக்க வளர்கிறது உழவனின் புன்னகை
பக். 14
தென்னையோலை
வேறொரு மரத்தில்
குருவிக்கூடு
பக். 21
தொடர்வண்டிப் பயணம்
கூடவே வருகின்றன
தண்டவாளங்கள்
பக்.25
சுதந்திர தினம்
மூவர்ணக்கொடி மேலேறியதும்
உதிர்ந்தன பூக்கள்.
பக். 35
வெட்டிய மரங்கள்
வாழ்க்கைக்கு ஒளியேற்றின
புத்தகங்கள்.
பக். 36
போதையின் பாதையில்
தடுமாறி விழுகிறார்கள்
பிஞ்சுக் குழந்தைகள்
பக். 46
சுதந்திர இந்தியா
ஆங்கிலேயர் தூண்டிச்சென்றனர்
அரியணை ஆசையை
பக். 52
பங்காளிச் சண்டை
வேலி தாண்டித் தலைநீட்டும்
செம்பருத்திப் பூ
பக். 68
மகன்களின் பிரிவினை
வேலி தாண்டிப் பூத்திருக்கும்
அம்மா வைத்த செம்பருத்தி.
பக். 72.
#அகநி வெளியீடு
📞94443 60421
2026
ரூ.120.
No comments:
Post a Comment