Wednesday 8 February 2017

வீதி கலை இலக்கியக்களம்.-35

வீதி கலை இலக்கியக்களம்
கூட்டம் -35
நாள்:29.1.17
இடம்:ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரி.புதுகை

எனக்கு பிடித்த புத்தகங்கள்

முதல் நிகழ்வாக எனக்கு பிடித்த புத்தகங்கள் என்ற தலைப்பில் அனைவரும் படிக்க வேண்டிய நூல்கள் குறித்து சிறு அறிமுகம் செய்தனர்.

வீதியின் இளந்தலைமுறை செல்வி எழில் ஓவியா
தனக்கு பிடித்த நூல்களாக
பொன்னியின் செல்வன்
மின்மினிக்காடுகள்
சேகுவேரா வாழ்க்கை வரலாறு
பிடல்காஸ்ட்ரோ
போன்ற நூல்கலை அறிமுகம் செய்த போது மனம் மகிழ்ந்தது...நம்பிக்கை ஊட்டக்கூடிய விதையாக அவள் வீதியில் பரிணமிக்கின்றாள்.

மீரா.செல்வக்குமார்.
தனது ஆழ்ந்த அகன்ற வாசிப்பால் எல்லோர்க்கும் மிகச்சிறந்த நூல்களை வீதியில் அறிமுகம் செய்தார்.
கருப்பர் நகரம்-கரன் கார்க்கி
பழைய சென்னையின் வரலாறு அதில் வாழ்ந்த மனிதர்கள் சேரிமக்களின் வாழ்க்கை என அந்நூல் மிக ஆழமாக உண்மை வரலாறைஎடுத்துக்கூறுகிறது என்றார்.
மாவீரன் அசோகன் மறைக்கப்பட்ட வரலாறு-மொழி பெயர்ப்பு தருமி
புத்தம் எவ்வாறு இந்தியாவில் கோலோச்சியது.அசோகன் ஏறத்தாழ 95%இந்தியாவை எவ்வாறு ஆட்சி புரிந்தான் என்பதை தெளிவாகக்காட்டும் நூலாக உள்ளது என்றார்.

பேராசிரியர் விஜயலெட்சுமி
தமிழில் ஏதும் சந்தேகம் என்றால் இவரிடம் தான் புதுகையின் ஆளுமைகள் கேட்பார்கள்..ஆழ்ந்த புலமை கொண்ட இவர் பரிந்துரைத்த நூல்கள்.

திருக்குறள்
மு.வ.மொழிவரலாறு
ஊருக்கு நல்லது சொல்வேன்
கதாவிலாசம்
வீரபாண்டியன் மனைவி
வாய்க்கால் மீன்கள் -இறையன்பு
ஏழாவது உலகம் -ஜெயமோகன்
சோளகர் தொட்டி-பாலமுருகன்.
டாலர் தேசம்-பா.ராகவன்.
பாரதிதாசன்
ஜெயகாந்தன்.

கவிஞர் கீதா
இவர் தான் வாசித்த ,மறக்க முடியாத நூல்களை எடுத்து வந்து காட்டி அறிமுகம் செய்த நூல்கள்,

முறிந்த சிறகுகள்-கலீல் ஜிப்ரான்
கடலும் கிழவனும்
எஸ்தர்-வண்ணநிலவன்
அபிதா
எங்கதெ
சோளகர் தொட்டி
மிளிர்கல்-முருகவேள்
சீவன் -கந்தர்வன்
மழைமான் எஸ்.ரா
பூமரப்பெண்-ச.மாடசாமி

வலைப்பதிவர் தமிழ் இளங்கோ திருச்சி

தென்னிந்திய மக்கள் குறித்த நூல்
மொழிவரலாறு ஆகிய நூல்களை அறிமுகம் செய்தார்.

”ஆனந்த விகடன் “கவிஞர் சச்சின்

பால் அரசியல்-நக்கீரன்
காடோடி -நக்கீரன்
லைட்டா பொறாமைப்படும் கலைஞன் -இசை
கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் பிராய்ட்-வெய்யில்
முன் கூறப்பட்ட சாவின் செல்வம்-அகதா
ஆகிய நூல்களை அறிமுகம் செய்தார்.

கவிஞர் சிவக்குமார்

ஹெலன் கெல்லர்
அன்னை தெரேசா

விதைக்கலாம் கஸ்தூரிரங்கன்

காலம் தோறும் பிராமணீயம்
முறிந்த சிறகுகள்-பண்ணை பதிப்பு
டிரைய்ன் டு பாகிஸ்தான் -குஷ்வந்த் சிங்

ஆகிய நூல்களை அறிமுகம் செய்தார்.

நிகழ்ச்சிகள்

வரவேற்புரை
விதைக்கலாம் கஸ்தூரிரங்கன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.


பாடல் -

எழில் ஓவியா தனது மென்மையான குரலால் மனதை நிறைக்கும்
”பெண்கள் கூடிப்பேச வேண்டும்” என்ற பாடலைப் பாடினார்.

கவிதை-

கவிஞர்.மீரா.செல்வகுமார்.

மாணவர் எழுச்சி

தைப்புரட்சி என அனைவராலும் வரவேற்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தை

”நூறு இளைஞர்கள் கேட்ட விவேகானந்தரே” என்ற அழகிய வரிகளால் துவங்கி ,உணர்வுகள் தூண்டப்படும் விதமாய் மிக அழகாக கவிதையால் கூறிய விதம் மிகச்சிறப்பு.

கவிஞர் சிவக்குமார்

”மரணம் மரத்திற்கும் தான்” என்ற கவிதையை படித்தார்...

கவிஞர் சுகுமாரன்
”ஊற்றெடுக்கும் தாகம்” என்ற ஹைக்கூ கவிதைகளைப் படித்தார்.மகளுக்கான கவிதை தந்தையின் தவிப்பை கூறுவதாக சிறப்புடன் இருந்தது.

கவிஞர் மாலதி
”கழனியெல்லாம் மண்வாசம்”என்ற பொங்கல் கவிதையைப்படித்தார்.




சிறப்பு விருந்தினர்
திருமிகு தமிழ் இளங்கோ அவர்களின் வலைப்பூ அனுபவம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.யதார்த்தமான தனது பேச்சால் வலைப்பூவில் என்னவெல்லாம் எழுதலாம்..எதனை எழுதக்கூடாது என்று மிக அருமையாக விளக்கினார்.

தலைமை
திருமிகு சுதந்திரராஜன் தனது பரந்த வாசிப்பால்,எல்லோருக்கும் நிறைய தகவல்களைக் கூறினார்.பழமையான எழுத்தாளர்களின் நூல்களை சிலாகித்து கூறிய விதம் மிகச்சிறப்பு.

நன்றியுரை

அனைவருக்கும் நன்றி கூறி வீதி கலை இலக்கியக்களம் -35 நிறைவாய் முடிந்தது.

அமைப்பாளர்
திருமிகு கஸ்தூரி ரங்கன் அவர்கள் மிகச்சிறப்பாக கூட்டத்தை நடத்தினார்.வீதி அவரைப்பாராட்டி மகிழ்கிறது..