கோ.லீலாவின் *#மணிச்சிரல்* ஹைக்கூ நூல் மீது, இலங்கையை சேர்ந்த ஹைக்கூ கவிஞர் முகம்மது இர்ஷாத் அவர்களின் கருத்துரை...
🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦
தங்களின் நூல் படித்தேன். சிறந்த ஆழமிக்க ஹைக்கூகள்
🐦
நீர் வரவர
குளத்தில் மறைகிறது
வண்டியோடிய தடம்
🐦
ஓடாத கடிகாரம்
சுற்றி வருகிறது
மீன் கூடையை பூனை
🐦
எச்சமிடுங்கள் பறவைகளே //
காடழிகிறது //
வேண்டும் காடுபேறு //
🐦
போன்ற எண்ணிறைந்த கவிதைகள் மனம் தொட்டன.
வாழ்த்துகள்
தாங்கள் சூழலியல் சிந்தனை மிக்க கவிஞர் என்பதை உணர முடிகிறது.
*#இஸ்லாமும்_சூழலியலும்* எனும் நூல் தங்களின் சிறந்த படைப்பு.
ஈழத்துத் தமிழ் ஹைக்கூ கவிதைகளில் சூழலியல் எனும் தலைப்பில் முதுமாணி பட்ட ஆய்வை முன்னெடுக்க உள்ளேன். இந்த ஆய்வில் அவ்வப்போது எழும் ஐயங்கள் தீர்த்து நெறிப்படுத்தத் தங்களிடம் விண்ணப்பம் செய்கிறேன்.
மிக்க நன்றி 🙏
#புதுக்கோட்டைத்_தமிழ்ச்_சங்கம்* *#நந்தவனம்_மாத_இதழ்* இணைந்து நடத்திய *#5வது_தமிழ்_ஹைக்கூ_உலக_மாநாடு* வழியே எனது ஹைக்கூ மற்றும் ஹைக்கூ ஆய்வுரை நூல்கள், அயல்நாட்டு தமிழ் ஹைக்கூ கவிஞர்களை சென்றடைந்துள்ளன.
குறிப்பாக, துபாய், மலேசியா, இலங்கை பகுதி கவிஞர்கள் தொடர்பு கொண்டு உரையாடுவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
எப்போதும் போல், புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை... எப்போ மாறுவேனோ.
நன்றியும்,பேரன்பும்💐💐💐 :
முகம்மது இர்ஷாத்
Thangam Moorthy அண்ணே முருகேஷ் மு அண்ணே, Nandavanam Chandrasekaran அண்ணன்மற்றும் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம், நந்தவனம் மாத இதழ், 5 வதுதமிழ் ஹைக்கூ உலக மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள்.
No comments:
Post a Comment