Monday 3 July 2017

வீதி -40

வீதி கலை இலக்கியக்களம் -40

நாள்: 25.6.17
இடம் :ஆக்ஸ்போர்ட் சமையர்கலைக்கல்லூரி புதுக்கோட்டை .
காலம் :10.00 காலை

வரவேற்புரை :கவிஞர்  கீதா .

தலைமை :திருமிகு இரா .ஜெயா
உதவி தொடக்கக்கல்வி அலுவலர் .திருச்சி .

சிறப்பு விருந்தினர் :கவிஞர்  முருக தீட்சண்யா. மயிலாடுதுறை

கவிதை :கவிஞர்  மீரா .செல்வகுமார்,கவிஞர் செந்தில்குமார்.

நூல் அறிமுகம் :செல்வி எழில் ஓவியா "உயிராயுதம் "

பாடல் :கவிஞர் பவல்ராஜ் .

நன்றியுரை :கவிஞர் சிவகுமார் .

வீதி குறித்து விமர்சனங்கள்

செல்வி எழில் ஓவியா

எழில் ஓவியா added 7 new photos — feeling happy with இரா.ஜெயா and 3 others.
கப்படுத்தினேன்.மது ஒழிப்பிற்காக உயிரைக் கொடுத்த அய்யா சசி பெருமாள் அவர்களின் போராட்ட வாழ்க்கையை அவருடனே 10 வருடங்களுக்கு மேலாகப் பயணித்து இப்புத்தகத்தில் ஆவணப்படுத்தியுள்ளார் அருள்தாஸ் .
இப்புத்தகத்தை அறிமுகப்படுத்த வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள். 😀🙏🙏🙏😀



சிறப்பு விருந்தினர் கவிஞர் முருகதீட்சன்யா அவர்கள்
முருக தீட்சண்யா added 5 new photos.
,வீதி இலக்கிய களத்தின் அழைப்பாளனாக.
39 நிகழ்வுகளை ஒரு இலக்கிய அமைப்பு சத்தமில்லாமல் கடந்திருப்பது பெரும் வியப்பை தந்தது,40 வது நிகழ்வு சோலச்சியின் பாடலோடு தொடங்கியது, தொடர்ந்தது கவிதை வாசிப்பு, படித்ததை பகிரும் தோழர்கள் என்று ஒரு கலை இலக்கியத்திற்கான முழு தேடலாக வீதி இருந்தது,
#எழில்_ஓவியாவின்
நூல் விமர்சனத்தை விடவும் அவர் மேடையை கையாளும் விதம் என்னை கவர்ந்தது
அதை விடவும்
அவருக்குள்ள கோபமும் அதில் உள்ள நியாயமும் அவருக்கு இருக்கும் தெளிவான புரிதலும் வியக்க வைத்தது,தன் இயல்பில் தன்னெழுச்சியாக துடிப்பாக வளரும் இப்படியான குழந்தைகளை பார்க்கிற போது ஒரு மகிழ்ச்சி தோன்றும் ஒரு மகளின் தகப்பனாக.
Devatha Tamil அவர்கள் மிகச் சிறப்பாக நிகழ்வை ஒருங்கினைத்திருந்தார்,தலைமை ஏற்ற இரா.ஜெயா அவர்கள் தன் இயல்பான மொழியால் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்,ஒரு தேர்ந்த கதை சொல்லியைப் போல. இவர் எங்கள் மயிலாடுதுறைக்காரர் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
ஒரு நல்ல அவையில் என் மனம் கவர்ந்த ஆளுமைகள் குறித்து பேசும் வாய்ப்பு Stalin Saravanan வழியாக கிடைத்தது
அவருக்கும் என் அன்பு.
வீதிக்கு என் வாழ்த்துகள்.
நண்பர் Andanoor Sura
தோழர் Neela Alangudi இவர்களின் சந்திப்பும் மகிழ்வை தந்தது.
 



சோலச்சி புதுக்கோட்டை பாடலுடன் தொடங்கி கவிதை விமர்சனம் கதை என கலை கட்டியது வீதிக்கு வந்த தோழர்கள். இது 40வது கூட்டம். வைகறை நினைவு படுத்திக் கொண்டோம். அவரது மனைவியை சந்தித்தேன். என்னால் முழுமையாக அவர் பற்றிய நினைவை பகிர முடியவில்லை. தாழம்பூ என்ற சிற்றிதழை 39ஆண்டுகளாக நடத்தி வரும் கோவிந்தராசன் அய்யாவை சந்தித்தேன் கிரியா ஊக்கியாக இருந்தார். உள் மனம் அவரை உதாரண புருசராக எடுத்துக்கொண்டு வலுப்பெற்றது. எல்லாவற்றுக்கும் நன்றிகளை கீதா Devatha Tamil தோழருக்கே சொல்ல வேண்டும். நல்ல சைவ சாப்பாட்டுடன் ஊர்த்திரும்பினோம். துண்டு போர்த்தி கௌரவித்தார்கள் பெருசா இருந்திச்சு. நன்றி முருக தீட்சண்யாவுக்கு.

நேற்று தோழர் Neela Alangudi வை சந்தித்ததில் ஒரு மகிழ்ச்சி ஒரு மிகச் சுவாரஸ்யமான புத்தக சேஸிங் அனுபவத்தை சொன்னார். அது கதையாக மாறினால் நன்றாக இருக்குமென தோனியது. கவிஞர் பவுல்ராஜ் மக்களிசை பாடலாக காலம் மாறிப்போச்சு என்று தானே எழுதி இசையுடன் பாடினார் மிக அருமையான தொடக்கம். Devatha Tamil தோழரின் தொடக்கம் அருமை இரா.ஜெயா தோழர் ஆசிரிய பணியில் இருந்து கொண்டு நல்ல தேர்ந்த வாசிப்பாளாராக இருப்பதும் மிக்க மகிழ்ச்சி. அவர்களின் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.




துவாரகா சாமிநாதன் added 2 new photos.
 சூழலில் மிகத் திடமாக பேசினாள். என் செல்லப் பெண் துவாரகாவை இப்படித்தான் வளர்க்க வேண்டுமென நினைக்கச் செய்தாள். மக்களிசை பாடலை பாடியதும் தன் விமர்சனமாக பெண்ணின் உடைகளை மட்டுமே விமர்சித்து பாடும் போக்கு தவறெனவும் தனக்கு தாவணி கம்பெர்டா இருந்தா போட்டுகிறேன் அப்படியில்லை ஏதாவது திருநாளில் வீட்டில் மட்டும் தாவணியும் மற்ற நாளில் ஜீன்ஸ் போடுவதில் என்ன குற்றம் கண்டீர் பாப் கட்டிங்கும் குட்டை பாவாடை போட்டால் உங்களுக்கேன் கோபம் வருகிறது அது போல ஆணுக்கான உடையை ஏதும் சொல்கிறீர்களா என பொரிந்து தள்ளினாள். பதில் சொல்லும் வரை பாடிய அய்யாவை விடவில்லை. சபாஷ் போட வைத்தாள். வளர்ப்பும் வாசிப்பும் சரியான பாதையில் சென்றால் அவள் பெரிய ஆளா வருவா..நாமும் அவளை வாழ்த்துவோம். அவளாண்ட போன் நம்பர் வாங்காது வந்துட்டேன். நாமும் அவளோடு உரையாடி உரமேற்ற வேண்டுமே. சமூகத்திற்கு ஒரு போராளி கிடைத்து விட்டாள்.
நம்பிக்கை ஊற்று நீ
வீதிக்கு வா மனிதியே
உலகம் உன் பின்னால் வரும்
கனல்மதிக்கு பிறகு அடுத்ததாக இவளை காண்கிறேன்.
வளர்த்தெடுத்த அன்னை அமிர்தா தமிழ் நன்றியும் அன்பும்.

இன்றைய தினத்தை முருக தீட்சண்யா வோடு வீதியில் களித்தேன். மனப்பாரம் கொஞ்சம் குறைந்திருந்தது. ஒரு மக்களிசை. புத்தக விமர்சனம். கவிதை வாசிப்பு என கலந்து பட்ட விருந்தாக அமைந்தது புதிய அன்பர்கள் நிறைய பேரை சந்தித்த மகிழ்ச்சி. தீட்சண்யாவின் அழகான மென்மையான கதை சொல்லல் முறையில் மூழ்கி திளைத்தேன். எழுத்தும் கலையும் வாழ்வும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டுமென ஊடு இலை பாவாக பேசினார் பாரதியில் தொடங்கி புதுமை பித்தன். கு.அழகிரிசாமி. பிரபஞ்சன் என அவர்களின் கதையை மட்டும் சொல்லாமல் அவர்களைப் பற்றிய நெகிழ்வான செய்திகளை சொல்லி நெகிழச் செய்தார். வைக்கம் பசீரைப் பற்றி அவர் பேசி முடித்த போது அனைவரும் அஞ்சு நிமிசம் அமைதியாய் நெகிழ்ந்திருந்தனர். இதற்கெல்லாம் நன்றிகள் தோழர்களுக்கு Devatha Tamilஅமிர்தா தமிழ்சோலச்சி புதுக்கோட்டைமிடறு முருகதாஸ்Andanoor Sura
கவிஞர் Andanoor Sura
கவிஞர் முருகதீட்சண்யாவின் இன்றைய உரை முக்கியமானது. கவிஞரான அவர் சிறுகதைகள் குறித்து பேசிய விதமும் அவர் எடுத்துகொண்ட கதைகளும் அவரொரு தேர்ந்த வாசிப்பாளர் எனக் காட்டியது. நன்றி கவிஞரே

Tuesday 28 March 2017

வீதி கலை இலக்கிய களம் -37

                            வீதி கலை இலக்கியக்களம்
                                கூட்டம்-37

இன்று புதுகை ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரியில் வீதி கலை இலக்கியக்களத்தின் 37 ஆவது கூட்டம் மிகச்சிறப்பாக நடந்தது.

நிகழ்விற்கு முன்னதாக கவிஞர் அன்னக்கொடி அவர்கள் வீதியைப்பற்றி எழுதிய கடிதத்தினை கவிஞர் சோலச்சி வாசித்து காட்டினார்.


கவிஞர் கீதா அண்மையில் வாசித்த “நிழலற்ற பெருவெளி” என்ற எழுத்தாளர் அர்ஷியாவின் மொழிபெயர்ப்பு நூல் குறித்தும்,”நிசப்தம்” திரைப்படம் குறித்தும் அறிமுகம் செய்தார்.

வரவேற்புரை:கவிஞர் நீலா..

ஒவ்வொருவரையும் அவர் அறிந்த விதத்தினைக்கூறி  வரவேற்ற விதம் அருமை.

Monday 20 March 2017

வீதி கலை இலக்கியக்களம்-36[19.2.17]

வீதி கலை இலக்கியக்களம்-36

பிப்ரவரி மாத வீதிக்கூட்டம்

மிகத்தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்..
 மிகச்சிறப்பாக நடந்தது வீதிக்கூட்டம்...

பிப்ரவரி மாதம் 19.2.17 அன்று அமைப்பாளர்களான பேராசிரியர் சக்திவேல் மற்றும் கவிஞர் சுகுமாரன் ஆகியோரால்அருமையாக நடந்தது..
வரவேற்புரை :கவிஞர் சுகுமாரன்...
தனக்கே உரிய பாணியில் அனைவரையும் அன்புடன் வரவேற்ற விதம் அருமை.

தலைமை:கவிஞர் .முத்துநிலவன்

வீதியின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் கவிஞர் முத்துநிலவன் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது..அவர் இம்மாத வீதியில்  தலைமை ஏற்று ஒரு பண்பாட்டுக்கூட்டமாக வீதி உள்ளது.ஒரு படைப்பு பற்றி நீண்ட நெடிய பாரம்பரிய மிக்க தமிழ் மொழியில், படைப்பாளனின் கடமை கூடுதலாக உள்ளது.வள்ளுவன் கையில் உள்ள எழுத்தாணியும்,தொல்காப்பியனின் தூரிகையும், நம் கையில் உள்ள பொறுப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக்கூறுகின்றது...இக்காலக்கல்வி படைப்பாளியை உருவாக்கவில்லை...என்று கூறி தனது சிறப்பானதொரு தலைமை உரையால் வீதிக்கு அணி செய்தார்.

முன்னிலை:கவிஞர் ஆ.ச. மாரியப்பன்..

முதுபெரும் கவிஞர் ஆ.ச.மாரியப்பன் அவர்கள் வீதிக்கு பெருமை மானவ்ர்கள் கலந்து கொண்டு நம்மை வழி நடத்துவது என்று பெருமிதம் கொண்டார்.

இசைப்பாடல்:கவிஞர் பவல்ராஜ்
வீதிக்கு பெருமை சேர்க்கும் கவிஞர்களில் ஒருவரான கவிஞர் பவல் ராஜ் அவர்கள் மதுவின் பாடு என்ற தலைப்பில்

                                     ”பாஸ் மார்க் வாங்கினாலும் 
                                         பார்ட்டி கொடுக்கிறான்”

தமிழனனின் வாழ்வோடு இரண்டறக்கலந்துள்ள மதுவின் தீமைகளை மிக அழகான வரிகளில் எழுதி இசையுடன் பாடி வீதிக்கு பெருமை சேர்த்தார்.

கருத்துரை :கவிஞர் ராசி.பன்னீர் செல்வம்

கவிதையின் புதிய வடிவாகத் தெலுங்கு மொழியில் அறிமுகமாகியுள்ள ”நாநீ”என்ற வடிவத்தை ஸ்மார்ட் கிளாஸாக புதுகைக்கு மிகத்தெளிவாக அறிமுகம் செய்த விதம் மிக அருமை...ஆகச்சிறந்த விமர்சகர்..கவிதையின் நவீனத்துவத்தை மிக அழகாக எடுத்துக்காட்டுகளுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் விளக்கினார்.

கவிஞர் ஆதவன் தீட்சண்யாவின் கவிதை
                                          ”தலித்துகள் 
                                     சற்றே அதிர்ஷ்டசாலிகள்
                                   அம்பேத்கர் கதையில் 
                                        துரோணரே இல்லை”

20-25 அசையில் /நான்கு வரிகளில் இந்திய பௌத்தம் &ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான குரலாக தமிழகத்தில் ”நாநீ”கவிதையின் தன்மை உள்ளது என மிகச்சிறப்பாக கூறினார்.

கவிதைப்போட்டி

கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப்போட்டி ,பேச்சுப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்கியது வீதியின் பாதையில் முன்னேற்றத்தைக்காட்டுகிறது...இதற்கு அமைப்பாளர்களின் தனி முயற்சியே காரணமாகும்.

நூல் விமர்சனம்:

கவிஞர் கீதா

ராகுல சாங்கிருத்தியாயன் அவர்களின் “வால்காவிலிருந்து கங்கை வரை”என்ற நூலை அறிமுகம் செய்தார்...


கவிஞர் சோலச்சி

கவிஞர் பொம்மூர் குமரேசனின் “அப்பாவின் வேட்டி”என்ற கவிதை நூலைப்பற்றி மிக அருமையாக அறிமுகம் செய்தார்.



சிறப்புரை:                   
                                   பேராசிரியர் மதிவாணன்.
                              டாக்டர் கலாம் பாலிடெக்னிக் முதல்வர்

முன்னோர்கள் கொண்டுவந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு வேண்டும் என்று கூறினார்.

                 பேச்சாளர் செக.மகேசன்.தஞ்சை

பண்பாட்டுடன் புதியன பிறத்தல் வேண்டும்.கவிதை உணர்ச்சி மட்டுமின்றி உணர்வை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கவிதையின் தன்மைகளை மிக அழகாக எடுத்துக்கூறிய விதம் சிறப்பு.

நன்றியுரை:பேராசிரியர் சக்திவேல்

மிகச்சிறப்பாக கூட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் அழகு தமிழில் நன்றி கூறி நிறைவு செய்தார்.

வீதிக்கு கல்லூரி மாணவர்களை அழைத்து ,போட்டிக்கள் நடத்தி பரிசுகள் வழங்கி...மிகச்சிறப்பாக நடத்திய பேராசிரியர் சக்திவேல் மற்றும் கவிஞர் சுகுமாரன் ஆகியோரை வீதி பெருமையுடன் பாராட்டி மகிழ்கின்றது .







Wednesday 8 February 2017

வீதி கலை இலக்கியக்களம்.-35

வீதி கலை இலக்கியக்களம்
கூட்டம் -35
நாள்:29.1.17
இடம்:ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரி.புதுகை

எனக்கு பிடித்த புத்தகங்கள்

முதல் நிகழ்வாக எனக்கு பிடித்த புத்தகங்கள் என்ற தலைப்பில் அனைவரும் படிக்க வேண்டிய நூல்கள் குறித்து சிறு அறிமுகம் செய்தனர்.

வீதியின் இளந்தலைமுறை செல்வி எழில் ஓவியா
தனக்கு பிடித்த நூல்களாக
பொன்னியின் செல்வன்
மின்மினிக்காடுகள்
சேகுவேரா வாழ்க்கை வரலாறு
பிடல்காஸ்ட்ரோ
போன்ற நூல்கலை அறிமுகம் செய்த போது மனம் மகிழ்ந்தது...நம்பிக்கை ஊட்டக்கூடிய விதையாக அவள் வீதியில் பரிணமிக்கின்றாள்.

மீரா.செல்வக்குமார்.
தனது ஆழ்ந்த அகன்ற வாசிப்பால் எல்லோர்க்கும் மிகச்சிறந்த நூல்களை வீதியில் அறிமுகம் செய்தார்.
கருப்பர் நகரம்-கரன் கார்க்கி
பழைய சென்னையின் வரலாறு அதில் வாழ்ந்த மனிதர்கள் சேரிமக்களின் வாழ்க்கை என அந்நூல் மிக ஆழமாக உண்மை வரலாறைஎடுத்துக்கூறுகிறது என்றார்.
மாவீரன் அசோகன் மறைக்கப்பட்ட வரலாறு-மொழி பெயர்ப்பு தருமி
புத்தம் எவ்வாறு இந்தியாவில் கோலோச்சியது.அசோகன் ஏறத்தாழ 95%இந்தியாவை எவ்வாறு ஆட்சி புரிந்தான் என்பதை தெளிவாகக்காட்டும் நூலாக உள்ளது என்றார்.

பேராசிரியர் விஜயலெட்சுமி
தமிழில் ஏதும் சந்தேகம் என்றால் இவரிடம் தான் புதுகையின் ஆளுமைகள் கேட்பார்கள்..ஆழ்ந்த புலமை கொண்ட இவர் பரிந்துரைத்த நூல்கள்.

திருக்குறள்
மு.வ.மொழிவரலாறு
ஊருக்கு நல்லது சொல்வேன்
கதாவிலாசம்
வீரபாண்டியன் மனைவி
வாய்க்கால் மீன்கள் -இறையன்பு
ஏழாவது உலகம் -ஜெயமோகன்
சோளகர் தொட்டி-பாலமுருகன்.
டாலர் தேசம்-பா.ராகவன்.
பாரதிதாசன்
ஜெயகாந்தன்.

கவிஞர் கீதா
இவர் தான் வாசித்த ,மறக்க முடியாத நூல்களை எடுத்து வந்து காட்டி அறிமுகம் செய்த நூல்கள்,

முறிந்த சிறகுகள்-கலீல் ஜிப்ரான்
கடலும் கிழவனும்
எஸ்தர்-வண்ணநிலவன்
அபிதா
எங்கதெ
சோளகர் தொட்டி
மிளிர்கல்-முருகவேள்
சீவன் -கந்தர்வன்
மழைமான் எஸ்.ரா
பூமரப்பெண்-ச.மாடசாமி

வலைப்பதிவர் தமிழ் இளங்கோ திருச்சி

தென்னிந்திய மக்கள் குறித்த நூல்
மொழிவரலாறு ஆகிய நூல்களை அறிமுகம் செய்தார்.

”ஆனந்த விகடன் “கவிஞர் சச்சின்

பால் அரசியல்-நக்கீரன்
காடோடி -நக்கீரன்
லைட்டா பொறாமைப்படும் கலைஞன் -இசை
கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் பிராய்ட்-வெய்யில்
முன் கூறப்பட்ட சாவின் செல்வம்-அகதா
ஆகிய நூல்களை அறிமுகம் செய்தார்.

கவிஞர் சிவக்குமார்

ஹெலன் கெல்லர்
அன்னை தெரேசா

விதைக்கலாம் கஸ்தூரிரங்கன்

காலம் தோறும் பிராமணீயம்
முறிந்த சிறகுகள்-பண்ணை பதிப்பு
டிரைய்ன் டு பாகிஸ்தான் -குஷ்வந்த் சிங்

ஆகிய நூல்களை அறிமுகம் செய்தார்.

நிகழ்ச்சிகள்

வரவேற்புரை
விதைக்கலாம் கஸ்தூரிரங்கன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.


பாடல் -

எழில் ஓவியா தனது மென்மையான குரலால் மனதை நிறைக்கும்
”பெண்கள் கூடிப்பேச வேண்டும்” என்ற பாடலைப் பாடினார்.

கவிதை-

கவிஞர்.மீரா.செல்வகுமார்.

மாணவர் எழுச்சி

தைப்புரட்சி என அனைவராலும் வரவேற்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தை

”நூறு இளைஞர்கள் கேட்ட விவேகானந்தரே” என்ற அழகிய வரிகளால் துவங்கி ,உணர்வுகள் தூண்டப்படும் விதமாய் மிக அழகாக கவிதையால் கூறிய விதம் மிகச்சிறப்பு.

கவிஞர் சிவக்குமார்

”மரணம் மரத்திற்கும் தான்” என்ற கவிதையை படித்தார்...

கவிஞர் சுகுமாரன்
”ஊற்றெடுக்கும் தாகம்” என்ற ஹைக்கூ கவிதைகளைப் படித்தார்.மகளுக்கான கவிதை தந்தையின் தவிப்பை கூறுவதாக சிறப்புடன் இருந்தது.

கவிஞர் மாலதி
”கழனியெல்லாம் மண்வாசம்”என்ற பொங்கல் கவிதையைப்படித்தார்.




சிறப்பு விருந்தினர்
திருமிகு தமிழ் இளங்கோ அவர்களின் வலைப்பூ அனுபவம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.யதார்த்தமான தனது பேச்சால் வலைப்பூவில் என்னவெல்லாம் எழுதலாம்..எதனை எழுதக்கூடாது என்று மிக அருமையாக விளக்கினார்.

தலைமை
திருமிகு சுதந்திரராஜன் தனது பரந்த வாசிப்பால்,எல்லோருக்கும் நிறைய தகவல்களைக் கூறினார்.பழமையான எழுத்தாளர்களின் நூல்களை சிலாகித்து கூறிய விதம் மிகச்சிறப்பு.

நன்றியுரை

அனைவருக்கும் நன்றி கூறி வீதி கலை இலக்கியக்களம் -35 நிறைவாய் முடிந்தது.

அமைப்பாளர்
திருமிகு கஸ்தூரி ரங்கன் அவர்கள் மிகச்சிறப்பாக கூட்டத்தை நடத்தினார்.வீதி அவரைப்பாராட்டி மகிழ்கிறது..








Friday 27 January 2017

வீதி 35ஆம் கூட்ட நிகழ்வுகள்

நிகழ்விடம் : ஆக்ஸ்போர்ட் உணவகக்கல்லூரி நேரம் : 29/01/2017 ஞாயிறு காலை 9:30 மணி

 

நிகழ்வுகள்

தலைமை : சுதந்திர ராஜன்

படிக்கவேண்டிய பத்து நூற்கள் : வருகையாளர்கள் அனைவரும்

பாடல்

எழில் ஓவியா

 

மாணவர் எழுச்சி

கவிஞர் மீரா செல்வக்குமார்

குறுங்கவிதைகள்

கவிஞர்பவல்ராஜ்”

நூல் விமர்சனம்

கவிஞர் கீதா

கவிதைகள் அறிமுகம்

தேவதைகளின் காதலன்

புலவர் மகாசுந்தர்

எனது வலையுலக அனுபவங்கள்

அய்யா தமிழ் இளங்கோ

 

இன்னும் பல நிகழ்வுகள்

வேண்டல் உங்கள் வருகை

 

பொறுப்பாளர்கள்

கவிஞர்.ந.முத்துநிலவன்

கவிஞர். கீதா

இம்மாதப் பொறுப்பாளர்கள்

அப்துல் ஜலில்

கஸ்தூரி ரெங்கன்

ஜே.ஆர்.சி. குழுவினர்

அரசு உயர்நிலைப்பள்ளி

எல்லைப்பட்டி

www.malartharu.org

veethimeet.blogspot.com