நன்றி உணர்வு
நன்றி உணர்வு என்றால் என்ன?
ஒரு கதையுடன் ஆரம்பிக்கலாம். கூண்டில் அடைபட்ட ஒரு புலியை பார்த்து இறக்கப்பட்டு ஒரு மனிதன் அதை கூண்டை விட்டு வெளியே வர உதவுகின்றான். அந்த புளியோ வெளிய வந்தவுடன் அந்த மனிதனை சாப்பிட ஆசைப்படுகின்றது. மனிதன் புலியிடம் கேட்கிறான் நான் செஞ்ச உதவிய நீ எப்படி மறக்கலாம். இவர் செய்த உதவிகளை எப்ப ஞாபகம் வச்சுக்கணும் இல்லையா என்று கேட்கின்றான். அதற்கு அந்த புலி அப்படி ஒன்றும் இல்லை என்கின்றது.
இவர்கள் பிரச்சனையை அந்த வழியை வந்த ஒரு நாயிடம் கூறுகின்றார்கள். அந்த நாயோ, புலி தான் சரி. நான் காலம் காலமாக எனது மாஸ்டருக்கு உதவியாக இருந்தேன். ஆனால் எனக்கு வயதானவுடன் அவன் இந்த காட்டில் கொண்டு வந்து விட்டு விட்டான். ஆகையால் முன்னர் செய்த உதவிகளுக்கு என்றும் மதிப்பில்லை என்கின்றது அது.
மனிதன் புலியிடம் இன்னொருவரிடம் கேட்போம் என்று கெஞ்சுகின்றான். அங்கு வந்த குதிரையிடம் அவர்கள் பிரச்சினையை சொன்ன பொழுது நாய் சொன்னதையே குதிரையும் சொன்னது.
இப்பொழுது மனிதன் கெஞ்சுகின்றான் மூன்றாவது ஒருவரிடம் கேட்போம் என்கின்றான். சம்மதித்து அந்த வழியில் வந்த நரியிடம் கேட்கின்றது. நரி எனக்கு ஒன்றும் புரியவில்லை நீங்கள் முதலில் இருந்து என்ன நடந்தது என்று நடித்துக் காண்பியுங்கள் அப்பொழுது நான் சொல்கின்றேன் என்றது. உடனே புலியும் கூண்டுக்குள் சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது நரி வேகமாக பாய்ந்து கதவை மூடிவிட்டது. அது மனிதனிடம் உன்னை நான் காப்பாற்றி விட்டேன் நீ பதிலுக்கு எனக்கு என்ன செய்யப் போகின்றாய் என்று கேட்கின்றது. நரிக்கெல்லாம் நான் என்ன திரும்ப செய்யணும் என்று சொன்ன மனிதன் அந்த நரியை விரட்டி விடுகின்றான்.
இந்த கதையை கேட்டவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகின்றது?
1. நமக்குச் செய்யும் உதவிகளை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்
2. நமது உறவுகளுக்கு தவறான நோக்கம் அடிப்படையாக இருந்து விடக்கூடாது
3. நமது தேவைகள் நிறைவேறிவிட்டால் நமக்குச் செய்யப்பட்ட உதவிகளை மறப்பது நமது வழக்கம்.
இதில் எந்த பதில் உங்களுக்கு பொருத்தமாக தோன்றுகின்றது. உங்கள் வாழ்க்கையில் யாராவது உங்களை இப்படி ஏமாற்றி இருந்தால் அது சுவைபட இருக்குமானால் இங்கு நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
இப்பொழுது நாம் நன்றி உணர்வை பற்றிப் பார்ப்போம்
ஒரு விஷயத்தையோ ஒரு மனிதரையோ பாராட்ட வேண்டும் என்று தோன்றினால் அல்லது நாம் அதற்காக அல்லது அவருக்காக நன்றியுடன் இருந்தால் அதுதான் நன்றி உணர்வு
இன்னும் சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.
1.நமக்கு கிடைத்தவற்றிற்கு, நம்மிடம் இருப்பவைகளுக்கு நன்றியுடன் இருப்பது
2.வாழ்க்கையில் நடக்கும் நல்ல விஷயங்களை அடையாளம் காணுதல் மற்றும் பாராட்டுதல்
3.பிறரிடம் இருந்து வெளிப்படும் கருணை மற்றும் பரிவினை அடையாளம் காணுதல்
4.நன்றியையும் பாராட்டையும் வெளிப்படையாகத் தெரிவித்தல்
இந்த நொடியில் அதுவும் விடிகாலை 6:00 மணிக்கு நீங்கள் யாருக்கு அல்லது எதற்கு நன்றிக் கடன் பட்டதாகத் தோன்றுகின்றது?
1.உங்கள் குடும்பம்
2.உங்களின் நல்ல உடல் நலம்
3.உங்களுக்கு உதவும் சக ஊழியர்
4.காலையில் காதலுடன் காபி கொடுத்த மனைவி
5.கைவசம் உங்களுக்கு இருக்கும் வேலை மற்றும் தொழில்
மேலே குறிப்பிட்ட ஐந்து விஷயங்களில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தீர்கள்? என்ன காரணம் என்று குறிப்பிடுங்கள்.
நன்றி உணர்வின் சக்தி
1.உங்களை மகிழ்ச்சியாக வைக்கின்றது
2.உங்களது ஸ்ட்ரெஸ் குறைகின்றது
3.உங்கள் உறவுகள் மேம்படுகின்றன
4.உங்களின் நேர்மறை சிந்தனையை கட்டமைக்கின்றது
5.உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது
6.வளமான வாழ்க்கையை உருவாக்கித் தருகின்றது
இதைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது உங்களுக்கு யாரைப் பாராட்டத் தோன்றுகிறது? இதில் உண்மை என்னவென்றால் நீங்கள் எந்த அளவிற்கு வாழ்க்கையை பாராட்டுகின்றீர்களோ அந்த அளவிற்கு வாழ்க்கையும் நீங்கள் பாராட்டுவதற்கான விஷயங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
நன்றி உணர்வின் பரிமாணங்கள்
1.பிறருக்கு நன்றியுடன் இருப்பது
நம்மை பெற்றெடுத்த பெற்றோர், நமக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் குருநாதர்கள், அப்போ பொழுது உதவி செய்த சக ஊழியர்கள், நமக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் நமக்கு கொடுக்கும் (பணம் கொடுத்தால் தான்) வென்டார்கள் என்ன நமது நன்றிக்குரியவர்கள் பலர். இவர்களால் நமது வாழ்வு மேம்பட்டு இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
2.நமக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கு நன்றி
நமக்கு கிடைத்த கல்வி, நாம் போராடி பெற்ற வேலை, வாழ்க்கை முழுவதும் நாம் கற்றுக் கொள்ளும் விஷயங்கள், நமது வெற்றிகளின் படிக்கட்டுகளாக இருக்கும் நாம் கண்ட தோல்விகள் என நமது நன்றி கூறிய விஷயங்கள் பல பல.
3.அன்றாட வாழ்க்கையில் நன்றிக்குரிய அம்சங்கள்
நமது உடல் ஆரோக்கியம், நமக்கு கிடைக்கும் சரிவிகித உணவு, நம்மை ஆற்றுப்படுத்தும் அல்லது அமைதிப்படுத்தும் இயற்கை, நமது நன்றிக்குரிய நேரம் என்று அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பல விஷயங்கள் நமது நன்றிக்குரியவைகளாக மாறுகின்றன.
பலர் தமது நன்றியை வெளிப்படுத்த வெற்றிக்காக காத்திருப்பர். ஆனால் வெற்றிகரமான மனிதர்கள் முதல் காரியமாக தமது நன்றியை உணர்வர்.
உங்கள் வாழ்க்கைக்கு பங்களித்த ஒரு பத்து பேரை நினைவு கூரவும். அதுமட்டுமல்ல கடைசியாக அவர்களுக்கு எப்பொழுது நீங்கள் நன்றி தெரிவித்தீர்கள்.
4.75 கிலோ எடையுடன் கிட்டத்தட்ட 56 டோல் வலியுடன் அதாவது 20 எலும்புகளை ஒரே நேரத்தில் உடைத்தால் என்ன வலி வலிக்குமோ அந்த அளவு வலியுடன் என்னைப் பெற்றெடுத்த என் தாய்க்கு நான் மிகுந்த நன்றி கடன் பட்டிருக்கின்றேன். ஆனால் அதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்தேன் என்றால் இல்லை என்பது தான் எனது பதில். என் தாய் முதலில் இந்த விஷயத்தை என்னிடம் சொன்னபொழுது எனஆணாதிக்க மனோபாவம் என்னை நம்ப விடவில்லை. பெண்கள் என்றால் சற்று கூட்டிக் குறைத்துத் தான் பேசுவார்கள் என்ற என்னுடைய தவறான கண்ணோட்டம் எனது நன்றி உணர்வைப் பாதித்துவிட்டது. எனக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தாலும் இந்த வலி பற்றிய செய்தியை நான் படித்தது என் தாயார் இறந்ததற்கு பின்னால் தான். அதுமட்டுமல்ல எனக்காக அதே அளவு எடையுடைய இரண்டாவது மகனை பெற்றுக் கொடுத்த எனது மனைவி இறந்த பின்னர் தான் இந்த செய்தியை பற்றி படித்தேன்.
இன்றளவும் அந்த இருவருக்கும் எனது நன்றி உணர்வை நான் தெரிவிக்கவில்லையே என்ற குற்ற உணர்வு இருக்கின்றது.
அவர்களைப் பற்றிய நன்றி உணர்வு இப்பொழுது மிகுந்து இருந்தாலும் அவர்களிடம் நேரடியாக தெரிவிக்க முடியவில்லை என்ற வருத்தம் தான் தொக்கி நிற்கின்றது.
நன்றி உணர்வு அறிவியல் பூர்வமாக என்ன சொல்கின்றது. நன்றி உணர்வு மிகுந்தால் நேர்மறை உணர்வுகள் உங்களை ஆக்கிரமிக்கும். அது உங்கள் மூளையிலிருந்து டோபோமைன் என்ற வேதிப்பொருளை சுரக்க வைக்கும். அதனால் உங்கள் வலி அகன்று மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.
உண்மையான நன்றி உணர்வு நமக்கு எது கிடைக்கவில்லை என்பதில் கவனத்தை செலுத்துவதை விட எது இப்பொழுது கைவசம் இருக்கின்றது என்பதை பற்றிய கவனம் செலுத்த வைக்கின்றது.
இப்படி ஒரு மனோபாவம் அமைந்துவிட்டால் தங்களது மனைவிகளை ஒருபோதும் பாராட்டாத கணவன்மார்கள் தங்களது இணையர்கள் பாராட்டும் அளவிற்கு, அல்லது மகிழும் அளவிற்கு தினமும் பாராட்டி மகிழ்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். இது மட்டுமல்ல அது எனக்கு ஒரு பழக்கம் இருக்கின்றது. நமக்கு தேவையான உணவுப்பொருட்களை இன்னும் பல விஷயங்களை நமக்கு கொடுக்கும் கடைக்காரர்களுக்கு பொருட்களை வாங்கி முடித்தவுடன் இன்றைய பொழுது நன்றாக இருக்கட்டும் என்று கூறுவது என்னுடைய வழக்கம். நூற்றுக்கு 90 பேர் அதைக் கேட்டு மகிழ்வார்கள். சிலர் என்ன நன்றாக இருக்கிறது என்று அலுத்துக் கொள்வார்கள்.
ஆனால் நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை. ஒரு சமயம் ஒரு பழக்கடைக்காரருடன் பழத்திற்கு இரண்டு ரூபாய் விலை குறைப்பதில் சிறிது சண்டை. அவர் கறாராக விலை குறைக்க முடியாது எனக் கூறிவிட்டார்.
பணம் வாங்கி முடிந்தவுடன் என் பெயர்த்தி நான் சொல்கின்றேன் என்று அவரிடம் இன்றைய பொழுது நன்றாக இருக்கட்டும் என்று கூறினாள். கோபத்தில் இருந்த அவர் அதை சரியாக கவனிக்கவில்லை ஆனால் சிறிய குழந்தை ஏதோ சொல்கின்றதே என்பதைப் பார்த்து விட்டார். அதனால் அவளிடம் என்ன பாப்பா சொன்னாய் என்று கேட்டார். இவ்வளவு மிகவும் பொறுமையாக இல்லை தாத்தா இன்றைய பொழுது உங்களுக்கு நன்றாக இருக்கட்டும் என்று சொன்னேன் என்றாள். இரண்டு ரூபாய் விலை குறைப்பதற்கு போராடிய அந்தப் பெரிய மனிதர் அந்தக் குழந்தையிடம் பத்து ரூபாய் பழத்தை எடுத்துக் கொடுத்து விட்டார். அதுதான் அந்தக் குழந்தைக்கான அவரது நன்றி உணர்வு.
குற்றச்சாட்டும் நன்றி உணர்வும்
ஏகப்பட்ட வேலை இருக்கு எனக்கு
நான் வளர்வதற்கு இவ்வளவு வாய்ப்புகள் இருப்பதால் நான் நன்றி உணர்வுடன் இருக்கின்றேன்
எனது முதலாளி மிகவும் கடுமையானவர்
எனது வளர்ச்சிக்காக என் முதலாளி என்னை உந்தித் தள்ளுகின்றார்.
என் வாழ்க்கைப் பாதை ரோஜாப் பூக்கள் அடங்கியது அல்ல, முள் பாதை. ஆனால் இந்தச் சவால்கள் என்னைப் புடம் போடுகின்றன.
இருப்பதைக் வைத்து கொண்டாடுங்கள்
பல வேத நூல்கள் இதைப் பற்றிக் கூறுகின்றன. ஆனாலும் வாலி பாராட்டிய கவிஞர் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் எனது நினைவிற்கு வருகின்றது.
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா என்ற பாடலில் வரும் முக்கியமான உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு என்ற வரிகள், இருப்பதைக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
உங்கள் அறையின் ஒரு மூலையில் அமர்ந்து, விளக்குகளை அணைத்துவிட்டு, அலைபேசியைத் தூர வைத்து விட்டுக் கண்களை மூடி நீங்கள் பிறந்ததிலிருந்து இன்று வரை நடந்த நல்ல விஷயங்கள், கடந்து வந்த நன்றிக்குரிய மனிதர்கள் என்று மனக்கண் முன் அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தி மனதார நன்றி சொல்லுங்கள். அவர்கள் உங்கள் பெற்றோர்களாக இருக்கலாம், ஆசிரியப் பெருமக்களாக இருக்கலாம், உங்கள் வழிகாட்டிகளாக இருக்கலாம், சக ஊழியர்களாக இருக்கலாம், அன்றாடம் நீங்கள் சந்திக்கும் மனிதர்களாகவும் இருக்கலாம். நன்றி உணர்வு பெருக்கிட கண்களை மூடி அவர்களை மன கண்ணில் பார்த்து மெல்ல அந்தந்த நிகழ்வுகளை அசை போடுங்கள்.
என்ன இவைகள் எல்லாம் நினைவூட்டிய எனக்கு நன்றி சொல்லத் தோன்றுகின்றதா?
நமது நன்றி உணர்வை எது தடை செய்கின்றது
1.ஒப்பிட்டு நோக்குதல். இன்றைய சமூக வலைதளங்களில் ஒப்பிட்டு பார்ப்பதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. அவை இயற்கையாகவே நமது பாராட்டு மனோபாவத்தை குறைக்கின்றன என்றால் மிகையாகாது
2.எதிர்பார்ப்புகள்
இல்லாததை நினைத்து அதை நோக்கிய கவனம் நம்மை பாதாள கூலிக்கு இழுத்துச் சென்று விடும்.
3.பாரபட்ச மனோபாவம்
மனித மூளை விசித்திரமானது. தனக்கு கிடைத்த ஆசீர்வாதங்களை கொண்டாடாமல் பிரச்சனைகளை மட்டுமே நினைவு கூர்கின்றது.
நன்றிக் கடிதம் எழுதுதல்
எந்த அளவிற்கு உங்களுக்கு பிறர் உதவியாக இருக்கின்றார்கள் என்பதைக் குறித்து அவர்களுக்கு உங்கள் நன்றியை வெளிப்படையாகத் தெரிவிக்கவும். எந்த விதத்தில் அவர்கள் உதவியாக இருந்தார்கள், என்ன விஷயங்களை எல்லாம் நீங்கள் கற்றுக் கொள்ள வழி காட்டினார்கள், எப்பொழுதும் எப்படி உதவியாக இருந்தார்கள் என்பதற்கான உங்கள் நன்றி உணர்வுகளை ஒரு கடிதம் மூலம் எழுதி குறிப்பிட்ட நபருக்கு அனுப்பினால் நீங்களும் மகிழ்வீர்கள். அவரும் மகிழ்வார். (அவருக்கும் டோபோர்மேன் சுரக்கும் அல்லவா)
புதிய பழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள்
இரவு படுக்கப் போகும் பொழுது உங்கள் நன்றி கூறிய மூன்று விஷயங்களை உங்கள் டைரியில் எழுதுங்கள்.
நீங்கள் பாராட்ட விரும்பும் ஒரு மனிதரைப் பற்றி குறிப்பிடுங்கள்.
இன்று என்ன பாடம் கற்றுக் கொண்டீர்கள் என்பதையும் எழுதுங்கள். இதற்கு என்ன இரண்டு நிமிடங்கள் ஆகுமா?
ஆக நண்பர்களே உங்களிடம் இருப்பவற்றை, அதாவது உங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதங்களைக் கொண்டாடுங்கள். பிறருடன் உங்களை ஒப்பிட்டு நோக்காதீர்கள். கிடைத்த நேரம் எல்லாம் பிறரைப் பாராட்டுங்கள். பிறருக்கு உதவி செய்யுங்கள். உங்களது நன்றி உணர்வு மேலும் பலன்களை உங்களுக்குப் பெற்றுத் தரட்டும் என வாழ்த்துகின்றேன்.
சோம.நாகலிங்கம் இ.வ.ப(பணி ஓய்வு)
நிறுவனர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர்,
நிகில் அறக்கட்டளை