Tuesday, 4 July 2023

மாமன்னன்

மாமன்னன் 
உண்மையில் நடிப்பில் வடிவேலு மாமன்னன் என்று நிரூபித்த படம்.
பண்பாடு இல்லாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளை ,அரசியல் பண்பாடு தெரிந்தவர் வெல்ல முடியும் என்று உரைக்கும் களம்.
வாழ்வியல் உண்மை கதையாக ,கதையே இங்கு நாயகனாக உருவெடுத்துள்ளது.
சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் ,தீண்டாமை தலைவிரித்து ஆடுவதை கண்முன் காண்கிறோம். இதெல்லாம் இப்போது இல்லை என்று சமாளிக்க முடியாது .ஏனெனில் இன்னும் சாட்சியாக வேங்கை வயல் .முடிவு தெரிந்தும் தீர்ப்பு வழங்காத, அல்லது வழங்க விரும்பாத பண்பாடு இல்லாத அரசியல்.
தெறிக்கவிடும் வசனம் ,மனதில் பதியும் காட்சிகள், ஆதிக்க குருதி நிறைந்த செம்மண் களம்.
 தந்தைக்கு மகனுக்கும் நடக்கின்ற போராட்டம். ஒரு மகன் தந்தைக்கு என்ன செய்ய வேண்டும் என்று உணர்த்தக்கூடிய படம் .
பெண்களை அரைகுறையாக ஆடவிட்டு சம்பாதிக்க நினைக்கும் திரை உலகத்தில் இப்படியும் ஒரு படம் .இனி தமிழ்ச் சினிமா எதார்த்தத்தை காட்சிப்படுத்தாமல், நாலு பாட்டு நாலு சண்டை என ஓட்ட முடியாது. மாமன்னனுக்கு கிடைத்த வரவேற்பு, மக்களின் எதிர்பார்ப்பை தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் உணர்த்தியுள்ளது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டியது தானே நியாயம்.
நாயக பாவம் இன்றி, வடிவேலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மதிப்பை பெறுகிறார் உதயநிதி .தனது ஆழமான நடிப்பால் மிளர்கிறார். படத்தின் கருவாக என்ன இருக்க வேண்டும் ?
 படம் யாருக்காக எடுக்க வேண்டும்?
 படம் எதைக் கூற வேண்டும் ?என்பதில் இயக்குனர் மாறி செல்வராஜ் மிகத் தெளிவாக இருப்பது, வலுவான திரைக்கதைக்கு அஸ்திவாரம் ஆகிறது. பகத் பாசிலின் நடிப்பு அவரது திறமையின் உச்சம் எனலாம்.
 கண்டும் காணாமல் அலட்சியமாக நாம் கடந்த உண்மைகள் முகத்தில் அறைந்து நமக்கு குற்ற உணர்ச்சியை உண்டாக்குவதை தவிர்க்க இயலவில்லை. ஏன் கடவுளாக இருந்தாலும் கூட கனக சபை ஏறிட எல்லாராலும் முடியாதல்லவா .வேரோடு இருக்கும் சாதி மத ஆதிக்க உணர்வை தகர்த்தெறியும் சிறு உளியாக மாமன்னன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் இப்படம் வெற்றி பெறக் காரணமான அனைவருக்கும்.

Saturday, 14 April 2018

vee 47

வீதி கலை இலக்கியக்களம் -௪௭ (47)

இம்மாத வீதிக்கூட்டம் மிகச் சிறப்பாக இளைஞர்கள் சூழ ௨௧.௧.௧௮ (21.1.18) ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது .

வரவேற்புரை:இம்மாத கூட்ட அமைப்பாளரான கல்வியாளர் சுதந்திரராஜன் அவர்கள் வீதியின் சிறப்பைக் கூறி அனைவரையும் வரவேற்ற விதம் சிறப்பு .

அஞ்சலி :மறைந்த எழுத்தாளர் ஞானி ,கவனகன் ஆகியோருக்கு வீதியின் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது .

கவிதை:

ஆசிரியர் சுந்தரவள்ளி தூக்கத்தை தொலைக்கச் செய்யும் புத்தகமே நல்ல புத்தகம் என்று கூறி அவருக்குப் பிடித்த கவிதைகள் சிலவற்றைக் கூறினார் .

காரைக்குடியில் இருந்து வீதியில் கலந்து கொண்ட கவிஞரும் முகநூல் நண்பரும் ,ஆசிரியருமான கிருஷ்ணவேணி அவர்கள் வீதியின் சிறப்புகளைக்கூறி "அச்சம் தவிர் "என்ற தலைப்பில் மிக அருமையான கவிதையை வழங்கினார் .

அறிமுக மாணவக் கவிஞர் அம்பி .பாலச்சந்திரன்தனது முதல் கவிதையான பல் தொடை வெண்பாக்கவிதையை "எண்ணங்கள் "என்ற தலைப்பில் வழங்கிய போது அனைவரும் மகிழ்ந்து பாராட்டினர் .வீதிக்கு கிடைத்துள்ள மற்றுமொரு தமிழ்ப்புதையல் அவர் .

பேராசிரியர் பாண்டியராஜன் அவர்கள் தனது ஹைக்கூ கவிதைகளால் வீதிக்கு கலகலப்பு ஊட்டினார் .
கவிஞர் மலையப்பன் "இடைவிடாத "எனத்துவங்கும் கவிதையை வழங்கி வீதிக்கு மெருகூட்டினார் .

சிறுகதை :

எங்கள் பள்ளியில் படிக்கும் எனது ஏழாம் வகுப்பு மாணவி விவேதா "செய்யும் தொழிலே தெய்வம் "என்ற தலைப்பில்
" பணம் சேர்ந்த பின் தொழிலைக்கவனிக்காத வியாபாரியைத்தேடும் மக்களுக்காக மீண்டும் அவன் வியாபாரம் செய்ய வருகிறான் "என்ற கருத்து மிக்க கதையைக் கூறிய விதம் அனைவரையும் கவர்ந்தது .

தலைமை :தலைவராகஅரசுப்பள்ளிகளுக்காக,அரசுப்பள்ளி மாணவர்களுக்காக குரல் கொடுக்கின்ற ,சமூகச்செயற்பாட்டாளர் ,புதுகையின் ஒளிப்பதிவாளர்களுள் குறிப்பிடத்தக்கவரான புதுகை செல்வா அவர்கள் தலைமை ஏற்று மிகச்சிறப்பாக வழி நடத்தினார்கள் .கவிஞர் வைகறை அமைப்பாளராக இருக்கையில் தலைமை ஏற்ற வீதியின் நினைவுகளைப்பகிர்ந்து ,தற்போது ரோஸ்லின் அவர்கள் அமைப்பாளராக இருக்கும் வீதியில் தலைமைப்பொறுப்பை ஏற்பது குறித்து நெகிழ்வின் உரையாகத்துவங்கினார்கள் .சமூகசீர்கேடுகளைக் கலைஞர்களால் மட்டுமே சுட்டிக்காட்டி திருத்த முடியும் என்றும்,ஜல்லிக்கட்டுத்துவங்கி இன்று வரை மாணவர்களின் போராட்டம் தொடரும் வகையில் சமூகம் நிலை சீர்கெட்டு கிடக்கும் நிலை உள்ளது .இலக்கியம் அதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. என்று சமூகம் சார்ந்த அவரது பேச்சு வீதிக்கு வலு கூட்டியது .

கட்டுரை :சகோதரி ரோஸ்லின் "மெரீனா இளைஞர் எழுச்சி "என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டுப்போராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் திரண்ட மாணாவர்களின் எழுச்சி ,இளைய சமுதாயத்திற்கான அறைகூவல் ....தீக்கங்கு போல அது சுடர் விட்டுக்கொண்டே இருக்கும் என்ற கருத்தில் கம்பீரமானக் குரலில் படைத்த விதம் மிக அருமை .அது குறித்த வீதி உறுப்பினர்களின் உணர்வான விமர்சனம் மிகச் சிறப்பு .

நூல் விமர்சனம்

கவிஞர் இரவி உதயன் அவர்களின் நூலை கவிஞர் அமிர்தாதமிழ் மிக எளிமையாக கவிதைகளை உணர்ந்து ஆழ்ந்து செய்த விமர்சனம் பாராட்டுதற்குரியது . .கவிஞர் செல்வா தனக்கே உரிய பாணியில்"பழகிக்கிடந்த நதி " என்ற நூலை கவிதையில் விமர்சனம் செய்தமுறை சிறப்பு .

கவிஞர் சாமி.கிருஷ் அவர்களின் "துருவேரியத்தூரிகைகள் "என்ற நூலை
"விதைக்கலாம்" மலையப்பன் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல அதன் சாரத்தை அட்டகாசமாக கூறிய போது நூலின் பெருமையை அனைவரும் உணர்ந்தனர் .சில முத்துக்களில் ஒன்று

"ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தைக் காட்டலாம்
நாங்கள்
அடி வயிற்றில் அல்லவா
அடிக்கப்படுகிறோம் "

அதை மனம் நெகிழ்ந்து நூலாசிரியர் சாமி கிருஷ் ஏற்றுக்கொண்டார் .

"காலத்தின் குரல் பெரியார் "

என்ற பேராசிரியர் தமிழரசன் அவர்களின் நூலை வீதியின் பெருமைக்குரிய குழந்தையான எழில் ஓவியா தனக்கே உரிய பாணியில் வியந்து பாராட்டி செய்த விமர்சனம் போற்றுதலுக்குரியது .பெரியாரை பெரியவர்களே உணராத காலத்தில் ,குழந்தைகள் உணர்வது என்பது ஆச்சர்யமான ஒன்று தானே ...

சிறப்புரை :வீதியின் வேராகவிளங்கும் கவிஞர் முத்துநிலவன் அவர்கள் வீதியின் ஐம்பதாவது கூட்டம் குறித்த ஆலோசனையை வழங்கினார் .கதையை கூறிய சிறுமிக்கு கவிஞர் சாமிக்கிருஷின் நூலை வாங்கி ,வழங்கி பாராட்டினார் .

டீ குடிப்பது என்பது
டீ குடிப்பது மட்டுமல்ல ...
அது போல ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஜல்லிக்காட்டுக்கானது மட்டுமல்ல .கொக்கோகோலா பாட்டிலைத் தலைகீழாகக்கொட்டி தனது எதிர்ப்பை காட்டிய மாணவர்களின் உணர்வின் வீச்சு .உடையில் இல்லை பண்பாடென்பது இரவிலும் பெண்களை மரியாதையாக பாதுகாப்பாக நடத்தி உலகிற்கே வழிகாட்டிய முன்மாதிரியான போராட்டம் .அது அக்னி என்றும் அணையாது என்று மிகச்சிறப்பனதொரு உரையை வழங்கினார் .

நன்றியுரை :அமைப்பாளர் ரோஸ்லின் நன்றியுரை வழங்கினார் .

வீதியை திட்டமிட்டு மிகச்சிறப்பாக வழங்கிய அமைப்பாளர்கள் இருவரையும் வீதி பாராட்டி மகிழ்கின்றது ..












Monday, 3 July 2017

வீதி -40

வீதி கலை இலக்கியக்களம் -40

நாள்: 25.6.17
இடம் :ஆக்ஸ்போர்ட் சமையர்கலைக்கல்லூரி புதுக்கோட்டை .
காலம் :10.00 காலை

வரவேற்புரை :கவிஞர்  கீதா .

தலைமை :திருமிகு இரா .ஜெயா
உதவி தொடக்கக்கல்வி அலுவலர் .திருச்சி .

சிறப்பு விருந்தினர் :கவிஞர்  முருக தீட்சண்யா. மயிலாடுதுறை

கவிதை :கவிஞர்  மீரா .செல்வகுமார்,கவிஞர் செந்தில்குமார்.

நூல் அறிமுகம் :செல்வி எழில் ஓவியா "உயிராயுதம் "

பாடல் :கவிஞர் பவல்ராஜ் .

நன்றியுரை :கவிஞர் சிவகுமார் .

வீதி குறித்து விமர்சனங்கள்

செல்வி எழில் ஓவியா

எழில் ஓவியா added 7 new photos — feeling happy with இரா.ஜெயா and 3 others.
கப்படுத்தினேன்.மது ஒழிப்பிற்காக உயிரைக் கொடுத்த அய்யா சசி பெருமாள் அவர்களின் போராட்ட வாழ்க்கையை அவருடனே 10 வருடங்களுக்கு மேலாகப் பயணித்து இப்புத்தகத்தில் ஆவணப்படுத்தியுள்ளார் அருள்தாஸ் .
இப்புத்தகத்தை அறிமுகப்படுத்த வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள். 😀🙏🙏🙏😀



சிறப்பு விருந்தினர் கவிஞர் முருகதீட்சன்யா அவர்கள்
முருக தீட்சண்யா added 5 new photos.
,வீதி இலக்கிய களத்தின் அழைப்பாளனாக.
39 நிகழ்வுகளை ஒரு இலக்கிய அமைப்பு சத்தமில்லாமல் கடந்திருப்பது பெரும் வியப்பை தந்தது,40 வது நிகழ்வு சோலச்சியின் பாடலோடு தொடங்கியது, தொடர்ந்தது கவிதை வாசிப்பு, படித்ததை பகிரும் தோழர்கள் என்று ஒரு கலை இலக்கியத்திற்கான முழு தேடலாக வீதி இருந்தது,
#எழில்_ஓவியாவின்
நூல் விமர்சனத்தை விடவும் அவர் மேடையை கையாளும் விதம் என்னை கவர்ந்தது
அதை விடவும்
அவருக்குள்ள கோபமும் அதில் உள்ள நியாயமும் அவருக்கு இருக்கும் தெளிவான புரிதலும் வியக்க வைத்தது,தன் இயல்பில் தன்னெழுச்சியாக துடிப்பாக வளரும் இப்படியான குழந்தைகளை பார்க்கிற போது ஒரு மகிழ்ச்சி தோன்றும் ஒரு மகளின் தகப்பனாக.
Devatha Tamil அவர்கள் மிகச் சிறப்பாக நிகழ்வை ஒருங்கினைத்திருந்தார்,தலைமை ஏற்ற இரா.ஜெயா அவர்கள் தன் இயல்பான மொழியால் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்,ஒரு தேர்ந்த கதை சொல்லியைப் போல. இவர் எங்கள் மயிலாடுதுறைக்காரர் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
ஒரு நல்ல அவையில் என் மனம் கவர்ந்த ஆளுமைகள் குறித்து பேசும் வாய்ப்பு Stalin Saravanan வழியாக கிடைத்தது
அவருக்கும் என் அன்பு.
வீதிக்கு என் வாழ்த்துகள்.
நண்பர் Andanoor Sura
தோழர் Neela Alangudi இவர்களின் சந்திப்பும் மகிழ்வை தந்தது.
 



சோலச்சி புதுக்கோட்டை பாடலுடன் தொடங்கி கவிதை விமர்சனம் கதை என கலை கட்டியது வீதிக்கு வந்த தோழர்கள். இது 40வது கூட்டம். வைகறை நினைவு படுத்திக் கொண்டோம். அவரது மனைவியை சந்தித்தேன். என்னால் முழுமையாக அவர் பற்றிய நினைவை பகிர முடியவில்லை. தாழம்பூ என்ற சிற்றிதழை 39ஆண்டுகளாக நடத்தி வரும் கோவிந்தராசன் அய்யாவை சந்தித்தேன் கிரியா ஊக்கியாக இருந்தார். உள் மனம் அவரை உதாரண புருசராக எடுத்துக்கொண்டு வலுப்பெற்றது. எல்லாவற்றுக்கும் நன்றிகளை கீதா Devatha Tamil தோழருக்கே சொல்ல வேண்டும். நல்ல சைவ சாப்பாட்டுடன் ஊர்த்திரும்பினோம். துண்டு போர்த்தி கௌரவித்தார்கள் பெருசா இருந்திச்சு. நன்றி முருக தீட்சண்யாவுக்கு.

நேற்று தோழர் Neela Alangudi வை சந்தித்ததில் ஒரு மகிழ்ச்சி ஒரு மிகச் சுவாரஸ்யமான புத்தக சேஸிங் அனுபவத்தை சொன்னார். அது கதையாக மாறினால் நன்றாக இருக்குமென தோனியது. கவிஞர் பவுல்ராஜ் மக்களிசை பாடலாக காலம் மாறிப்போச்சு என்று தானே எழுதி இசையுடன் பாடினார் மிக அருமையான தொடக்கம். Devatha Tamil தோழரின் தொடக்கம் அருமை இரா.ஜெயா தோழர் ஆசிரிய பணியில் இருந்து கொண்டு நல்ல தேர்ந்த வாசிப்பாளாராக இருப்பதும் மிக்க மகிழ்ச்சி. அவர்களின் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.




துவாரகா சாமிநாதன் added 2 new photos.
 சூழலில் மிகத் திடமாக பேசினாள். என் செல்லப் பெண் துவாரகாவை இப்படித்தான் வளர்க்க வேண்டுமென நினைக்கச் செய்தாள். மக்களிசை பாடலை பாடியதும் தன் விமர்சனமாக பெண்ணின் உடைகளை மட்டுமே விமர்சித்து பாடும் போக்கு தவறெனவும் தனக்கு தாவணி கம்பெர்டா இருந்தா போட்டுகிறேன் அப்படியில்லை ஏதாவது திருநாளில் வீட்டில் மட்டும் தாவணியும் மற்ற நாளில் ஜீன்ஸ் போடுவதில் என்ன குற்றம் கண்டீர் பாப் கட்டிங்கும் குட்டை பாவாடை போட்டால் உங்களுக்கேன் கோபம் வருகிறது அது போல ஆணுக்கான உடையை ஏதும் சொல்கிறீர்களா என பொரிந்து தள்ளினாள். பதில் சொல்லும் வரை பாடிய அய்யாவை விடவில்லை. சபாஷ் போட வைத்தாள். வளர்ப்பும் வாசிப்பும் சரியான பாதையில் சென்றால் அவள் பெரிய ஆளா வருவா..நாமும் அவளை வாழ்த்துவோம். அவளாண்ட போன் நம்பர் வாங்காது வந்துட்டேன். நாமும் அவளோடு உரையாடி உரமேற்ற வேண்டுமே. சமூகத்திற்கு ஒரு போராளி கிடைத்து விட்டாள்.
நம்பிக்கை ஊற்று நீ
வீதிக்கு வா மனிதியே
உலகம் உன் பின்னால் வரும்
கனல்மதிக்கு பிறகு அடுத்ததாக இவளை காண்கிறேன்.
வளர்த்தெடுத்த அன்னை அமிர்தா தமிழ் நன்றியும் அன்பும்.

இன்றைய தினத்தை முருக தீட்சண்யா வோடு வீதியில் களித்தேன். மனப்பாரம் கொஞ்சம் குறைந்திருந்தது. ஒரு மக்களிசை. புத்தக விமர்சனம். கவிதை வாசிப்பு என கலந்து பட்ட விருந்தாக அமைந்தது புதிய அன்பர்கள் நிறைய பேரை சந்தித்த மகிழ்ச்சி. தீட்சண்யாவின் அழகான மென்மையான கதை சொல்லல் முறையில் மூழ்கி திளைத்தேன். எழுத்தும் கலையும் வாழ்வும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டுமென ஊடு இலை பாவாக பேசினார் பாரதியில் தொடங்கி புதுமை பித்தன். கு.அழகிரிசாமி. பிரபஞ்சன் என அவர்களின் கதையை மட்டும் சொல்லாமல் அவர்களைப் பற்றிய நெகிழ்வான செய்திகளை சொல்லி நெகிழச் செய்தார். வைக்கம் பசீரைப் பற்றி அவர் பேசி முடித்த போது அனைவரும் அஞ்சு நிமிசம் அமைதியாய் நெகிழ்ந்திருந்தனர். இதற்கெல்லாம் நன்றிகள் தோழர்களுக்கு Devatha Tamilஅமிர்தா தமிழ்சோலச்சி புதுக்கோட்டைமிடறு முருகதாஸ்Andanoor Sura
கவிஞர் Andanoor Sura
கவிஞர் முருகதீட்சண்யாவின் இன்றைய உரை முக்கியமானது. கவிஞரான அவர் சிறுகதைகள் குறித்து பேசிய விதமும் அவர் எடுத்துகொண்ட கதைகளும் அவரொரு தேர்ந்த வாசிப்பாளர் எனக் காட்டியது. நன்றி கவிஞரே

Tuesday, 28 March 2017

வீதி கலை இலக்கிய களம் -37

                            வீதி கலை இலக்கியக்களம்
                                கூட்டம்-37

இன்று புதுகை ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரியில் வீதி கலை இலக்கியக்களத்தின் 37 ஆவது கூட்டம் மிகச்சிறப்பாக நடந்தது.

நிகழ்விற்கு முன்னதாக கவிஞர் அன்னக்கொடி அவர்கள் வீதியைப்பற்றி எழுதிய கடிதத்தினை கவிஞர் சோலச்சி வாசித்து காட்டினார்.


கவிஞர் கீதா அண்மையில் வாசித்த “நிழலற்ற பெருவெளி” என்ற எழுத்தாளர் அர்ஷியாவின் மொழிபெயர்ப்பு நூல் குறித்தும்,”நிசப்தம்” திரைப்படம் குறித்தும் அறிமுகம் செய்தார்.

வரவேற்புரை:கவிஞர் நீலா..

ஒவ்வொருவரையும் அவர் அறிந்த விதத்தினைக்கூறி  வரவேற்ற விதம் அருமை.

Monday, 20 March 2017

வீதி கலை இலக்கியக்களம்-36[19.2.17]

வீதி கலை இலக்கியக்களம்-36

பிப்ரவரி மாத வீதிக்கூட்டம்

மிகத்தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்..
 மிகச்சிறப்பாக நடந்தது வீதிக்கூட்டம்...

பிப்ரவரி மாதம் 19.2.17 அன்று அமைப்பாளர்களான பேராசிரியர் சக்திவேல் மற்றும் கவிஞர் சுகுமாரன் ஆகியோரால்அருமையாக நடந்தது..
வரவேற்புரை :கவிஞர் சுகுமாரன்...
தனக்கே உரிய பாணியில் அனைவரையும் அன்புடன் வரவேற்ற விதம் அருமை.

தலைமை:கவிஞர் .முத்துநிலவன்

வீதியின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் கவிஞர் முத்துநிலவன் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது..அவர் இம்மாத வீதியில்  தலைமை ஏற்று ஒரு பண்பாட்டுக்கூட்டமாக வீதி உள்ளது.ஒரு படைப்பு பற்றி நீண்ட நெடிய பாரம்பரிய மிக்க தமிழ் மொழியில், படைப்பாளனின் கடமை கூடுதலாக உள்ளது.வள்ளுவன் கையில் உள்ள எழுத்தாணியும்,தொல்காப்பியனின் தூரிகையும், நம் கையில் உள்ள பொறுப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக்கூறுகின்றது...இக்காலக்கல்வி படைப்பாளியை உருவாக்கவில்லை...என்று கூறி தனது சிறப்பானதொரு தலைமை உரையால் வீதிக்கு அணி செய்தார்.

முன்னிலை:கவிஞர் ஆ.ச. மாரியப்பன்..

முதுபெரும் கவிஞர் ஆ.ச.மாரியப்பன் அவர்கள் வீதிக்கு பெருமை மானவ்ர்கள் கலந்து கொண்டு நம்மை வழி நடத்துவது என்று பெருமிதம் கொண்டார்.

இசைப்பாடல்:கவிஞர் பவல்ராஜ்
வீதிக்கு பெருமை சேர்க்கும் கவிஞர்களில் ஒருவரான கவிஞர் பவல் ராஜ் அவர்கள் மதுவின் பாடு என்ற தலைப்பில்

                                     ”பாஸ் மார்க் வாங்கினாலும் 
                                         பார்ட்டி கொடுக்கிறான்”

தமிழனனின் வாழ்வோடு இரண்டறக்கலந்துள்ள மதுவின் தீமைகளை மிக அழகான வரிகளில் எழுதி இசையுடன் பாடி வீதிக்கு பெருமை சேர்த்தார்.

கருத்துரை :கவிஞர் ராசி.பன்னீர் செல்வம்

கவிதையின் புதிய வடிவாகத் தெலுங்கு மொழியில் அறிமுகமாகியுள்ள ”நாநீ”என்ற வடிவத்தை ஸ்மார்ட் கிளாஸாக புதுகைக்கு மிகத்தெளிவாக அறிமுகம் செய்த விதம் மிக அருமை...ஆகச்சிறந்த விமர்சகர்..கவிதையின் நவீனத்துவத்தை மிக அழகாக எடுத்துக்காட்டுகளுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் விளக்கினார்.

கவிஞர் ஆதவன் தீட்சண்யாவின் கவிதை
                                          ”தலித்துகள் 
                                     சற்றே அதிர்ஷ்டசாலிகள்
                                   அம்பேத்கர் கதையில் 
                                        துரோணரே இல்லை”

20-25 அசையில் /நான்கு வரிகளில் இந்திய பௌத்தம் &ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான குரலாக தமிழகத்தில் ”நாநீ”கவிதையின் தன்மை உள்ளது என மிகச்சிறப்பாக கூறினார்.

கவிதைப்போட்டி

கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப்போட்டி ,பேச்சுப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்கியது வீதியின் பாதையில் முன்னேற்றத்தைக்காட்டுகிறது...இதற்கு அமைப்பாளர்களின் தனி முயற்சியே காரணமாகும்.

நூல் விமர்சனம்:

கவிஞர் கீதா

ராகுல சாங்கிருத்தியாயன் அவர்களின் “வால்காவிலிருந்து கங்கை வரை”என்ற நூலை அறிமுகம் செய்தார்...


கவிஞர் சோலச்சி

கவிஞர் பொம்மூர் குமரேசனின் “அப்பாவின் வேட்டி”என்ற கவிதை நூலைப்பற்றி மிக அருமையாக அறிமுகம் செய்தார்.



சிறப்புரை:                   
                                   பேராசிரியர் மதிவாணன்.
                              டாக்டர் கலாம் பாலிடெக்னிக் முதல்வர்

முன்னோர்கள் கொண்டுவந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு வேண்டும் என்று கூறினார்.

                 பேச்சாளர் செக.மகேசன்.தஞ்சை

பண்பாட்டுடன் புதியன பிறத்தல் வேண்டும்.கவிதை உணர்ச்சி மட்டுமின்றி உணர்வை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கவிதையின் தன்மைகளை மிக அழகாக எடுத்துக்கூறிய விதம் சிறப்பு.

நன்றியுரை:பேராசிரியர் சக்திவேல்

மிகச்சிறப்பாக கூட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் அழகு தமிழில் நன்றி கூறி நிறைவு செய்தார்.

வீதிக்கு கல்லூரி மாணவர்களை அழைத்து ,போட்டிக்கள் நடத்தி பரிசுகள் வழங்கி...மிகச்சிறப்பாக நடத்திய பேராசிரியர் சக்திவேல் மற்றும் கவிஞர் சுகுமாரன் ஆகியோரை வீதி பெருமையுடன் பாராட்டி மகிழ்கின்றது .