Thursday, 5 March 2026

தாய் கிழவி

தாய் கிழவி 
ஒரு கலையரசி ராதிகாவின் ஆகச்சிறந்த திரைப்படம் தாய்க்கிழவி.  பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு தனது ஆங்காரமான அட்டகாசமான நடிப்பால் பதிலடி கொடுக்கும் பவுனுத்தாய் , அனைத்து பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக பவுனுத்தாயாகவே ராதிகா வாழ்ந்திருப்பது அற்புதம் .

ஒரு பாத்திரத்திற்காக தன்னையே அர்ப்பணித்து பெண்களாலும் நடிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக ராதிகாவின் நடிப்பு கோலோச்சுகிறது. ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் ? யார் கையையும் எதிர்பார்க்காமல் அவள் பொருளாதாரத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்று உரைக்கும் படம். ஒரு பெண் தனித்து வாழும் பொழுது தனது குழந்தைத்தனங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு தனக்கான ஒரு முகமூடி அணிந்து அவள் ஒரு கம்பீரமான அடங்காப்பிடாரியாக அனைவருக்கும் முன் காட்சியளிக்கும் போதும், ஒரு குழந்தை தனத்துடன் சிறுவர்களுக்கான கண்ணாடி அணிந்து, ஐஸ்கிரீம் சாப்பிட்டு, திரைப்படம் பார்த்து ஜிகிர்தண்டா குடித்து தனக்கான விருப்பங்களை சுயமாக நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய ஒரு பெண்ணாக வாழ்ந்து காட்டி உள்ளார்.  தனது சுதந்திரம், ஆசைகள் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு குடும்பத்தினருக்காக வாழ்கின்ற பெண்ணே  சிறந்த பெண் என்று கற்பிக்கப்பட்ட சமூகத்தில் ,என் காசு என் இஷ்டப்படி தான் நான் வாழ்வேன் என்று சொல்வதற்கு  ஒரு துணிச்சல் பெண்ணுக்குத் தேவைப்படுகிறது .இந்தக் காலத்தில் வேலைக்கு போகும் ஒரு பெண் நான் சம்பாதிக்கிறேன் என்று சொன்னால் கூட குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழலில் தாய்க்கிழவி, தாய் வழிச் சமூகத்தின் அடையாளமாக திகழ்கிறார். படத்தின் வசனம் ஒவ்வொன்றும் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கக் கூடியதாக மிகச் சிறப்பாக அமைந்துள்ளது .திரைக்கதை பின்னணி இசை, ஸ்கிரிப்ட் , ஒளிப்பதிவு அனைத்தும் சிறப்பு.
ஒவ்வொருவரும் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருப்பது படத்தில் வெற்றிக்கு அடி கோள்கிறது. தெறிக்கும் வசனங்கள்.
 படம் முடிந்து வெளியே வரும் பொழுது ராதிகாவின் அட்டகாசமான நடிப்பை எல்லோரும் புகழ்ந்து கூறிக்கொண்டு வெளியேறுவதை காண முடிந்தது. ஒரு பெண் கம்பீரமாக தலை நிமிர்ந்து வாழ முடியும் என்பதற்கு உதாரணம்தான் பவுனுத்தாய். தனது மகள் இரண்டாம் திருமணத்தின் பொழுது தாலி கட்டும் பொழுது நிமிர்ந்து தாலியை வாங்கு என்று கூறுவதன் மூலம் பெண்ணுக்கு எதிரான அநியாயங்களுக்கு பெண்கள் தலை நிமிர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் தான் பவுனுத்தாய் . "பத்து தலைமுறையாக படிக்க முடியாம இப்பதான் படிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு விட்டால் படிச்சிடு"
"60 வயசுல எனக்கு கிடைச்ச சுதந்திரம் 30 வயசுல என் மகளுக்கு கிடைச்ச சுதந்திரம் என் பேத்திக்கு 15 வயசுல கிடைச்ச சுதந்திரம் அவ மகள் பிறக்கும் போதே சுதந்திரமா பொறப்பா"

யாருப்பா திரைக்கதை வசனம் கையை கொடுங்கப்பா ...

சிவகார்த்திகேயன் கூட்டணிக்கு ஒரு ராயல் சல்யூட்.

எல்லோருக்குள்ளும் ஒரு பவுனுத் தாய் வாழ்கிறாள் அதனால் இந்த உலகம் வாழ்கிறது அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்.

No comments:

Post a Comment