அவர் பேசிய பேச்சுகளை
ஏதென்சு நகரைச் சுற்றிவந்த
சாக்ரடீசும் பேசியிருக்க முடியாது.
உலகப் பெரும் பேச்சாளர்
என்று பெயரெடுத்த மெகசுதனிசும்
பேசியிருக்க முடியாது.
அவர் சுற்றிய தொலைவைக்
கிரேக்க மன்னன் அலெக்சாண்டரும்
சுற்றியிருக்க முடியாது.
அவர் பிரெஞ்சு மாமறவர் நெப்போலியனைவிடப் போரிட்டவர்.
உருசிய இலெனினைவிடப்
பொதுமக்களை நேருக்கு நேராகக்
கண்டு பேசியவர்.
குருசேத்திரப் பாரதப் போரைவிட
ஆரியத்தின் மேல் அவர் தொடுத்த போர்
மிகப் பெரியது.
கடுமையானது.
வேறு எவரும் தொடுக்க அஞ்சியது.
நினைத்துத் தொடை நடுங்கியது"
பெரியார் குறித்து
பாவலரேறு பெருஞ்சித்திரனார் -
1971இல் எழுதியது.
Sirpi Rajan முகநூல் பதிவு