Tuesday 22 March 2016

வீதி-25

அன்புடன் அழைக்கின்றோம்....வந்துடுவீங்க தானே...

வீதி
கலை இலக்கியக்களம்
25 ஆவது சிறப்பு கூட்டம்

நாள்:27.03.16
இடம் :நில அளவையர் கூடம்.புதுக்கோட்டை.


மதிப்பிற்குரிய எங்களின் முதன்மைக்கல்வி அலுவலர் திருமிகு அருள்முருகன் அவர்களின் சிந்தனையால் புதுகையில் தமிழ், கணினியில் புதிய வளர்ச்சியின் அடையாளமாக ,வலைப்பதிவர்களை உருவாக்கி அவர்களுக்கு பயிற்சி அளித்தார்.இன்று வலைப்பதிவர் விழா சிறப்புடன் நடந்ததும்,புதுகையில் அறுபதுக்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் இருப்பதற்கும் அவர் அன்று விதைத்த விதையே காரணம்..

அது மட்டுமின்றி சிறந்த இலக்கியவாதிகளை,படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்ற அவரது சிந்தனையில் தோன்றியது தான் வீதி என்ற அமைப்பு.இதற்கான பெயர் வைத்தலில் நிறைய பெயர்கள் இடம் பெற்றாலும் திரு.மகாசுந்தர் அவர்கள் புதுகையின் சிறப்பு வீதி என்பதால் வீதி என பெயர் வைக்கலாம் என்றதும் அனைவராலும் ஏற்கப்பட்டு வீதி நிலை பெறத்துவங்கி இன்று தனது 25 ஆவது வாரத்தை வெற்றியுடன் கொண்டாட உள்ளது.

வீதியின் வளர்ச்சியுடன் தங்களை வளர்த்து கொண்டவர்கள் இன்று வீதியை கொண்டாடும் ஆவலில் உள்ளனர்.வீதி நல்ல படைப்பாளிகளை,வாசகர்களை,கவிஞர்களை உருவாக்கிக்கொண்டு வருகின்றது...

மகிழ்வுடன் அழைக்கின்றோம்...உங்கள் வருகையால் வீதி சிறக்கட்டும் ....






1 comment:

  1. கூட்டம் சிறப்புற வாழ்த்துகள்.

    ReplyDelete