Wednesday 11 May 2016

முகநூலின் வலிமை உணர்கின்றேன்...

முகநூலின் வலிமை உணர்கின்றேன்...
 \
நன்றி சே.தமிழா,அப்பாஸ் .

பார்த்ததும் இல்லை,பேசியதும் இல்லை.

கவிஞர் வைகறையின் பதிவைப்பார்த்து விட்டு மனம் நெகிழ்ந்து ரூ5000/ அனுப்பியுள்ளார்...முகநூல் நண்பர் சே.தமிழா.. என்ற தமிழரசன்.https://www.facebook.com/chetamilaa?fref=ts

பொள்ளாச்சியைச்சேர்ந்த இவர் ..தற்போது சென்னையில் பணி புரிகின்றார்...மறைந்த கவிஞன் வைகறையின் மகனுக்கு நீளும் உதவிக்கரங்களை வணங்குகின்றேன்...

 நேற்று ஒரு திருமண சந்திப்பில் திடீரென வந்து ரூ 500 கொடுத்தார் நண்பர் அப்பாஸ் தனது தேவதையான மகளை அறிமுகம் செய்து...எதிர்பார்க்காத உதவி கிடைக்கும் போது மனம் நெகிழ்கின்றது...மிக்க நன்றி அப்பாஸ்.https://www.facebook.com/absyasmine.absyasmine?pnref=friends.search

 பணம் என்பதை விட தனக்கு அப்பா கொடுத்த உறவுகளாய் அவன் வளர்ந்த பிறகு உணரும் போது நம்மில் அவன் தந்தையைக் காண்பான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

 நாங்கள் இருக்கின்றோம் என நீங்கள் தயாராக உள்ள போது ரூ5,00.000 என்ற இலக்கில் தற்போது ரூ 1,25,000 சேர்ந்து உள்ளது...

 தொடரும் கரங்களுக்கு அன்பான நன்றிகள்....

No comments:

Post a Comment